Sunday 24 June 2012

என் நெஞ்சில்


என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என் கண்ணிலொரு தீவந்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
பாதை என உயிரும் சொன்னதன்பே
பாதை என உயிரும் சொன்னதன்பே

என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என் தீவில் ஒரு ஆள் வந்ததன் ஆள் எங்கு என்னகேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னதன்பே
காதல் இது உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே எடைபோடுமே
மழை நேரத்தில் விழியோரத்தில் இருளாகவே உயிர்தோன்றும்
இதயம் எடைபோடவே இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என் கண்ணிலொரு தீவந்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவேயில்லை
எதிர் காற்றிலே குடை போலவே
சாய்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என இன்று புரின்தேனடா
என்னை நீ ஏற்றுகொல் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என் கண்ணிலொரு தீவந்ததன் பேர் என்னவெனக் கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
பாதை என உயிரும் சொன்னதன்பே
பாதை என உயிரும் சொன்னதன்பே

No comments:

Post a Comment